கடந்த ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டுப் புத்தாண்டு சுமூகமாக அமைந்துள்ளது – மேலும் சிறப்பானதாக அனைவரும் ஒன்றிணையவேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள்!

Monday, April 10th, 2023

2022ஆம் ஆண்டை விடவும் இந்த வருடம் புத்தாண்டு மிகவும் சுமூகமாக அமைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பானதாக அனைவரும் ஒன்றிணையவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 26 புதிய பேரூந்துகளை, கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

2024ஆம் ஆண்டினை இன்னும் சிறப்பாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு முழு இலங்கை மக்களுக்கும் இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய பேருந்துகள் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், நுவரெலியா, கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த மற்றும் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை ஆகிய டிப்போக்களுக்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: