கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை பூரணப்படுத்தப்படாதுள்ள வீடுகளை முழுமையாக்க நடவடிக்கை!
Friday, November 6th, 2020கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பூரணமாக நிதி வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, குறித்த வீடுகளுக்கான மீதித் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வீடமைப்பு திடடங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு இல்லை!
க.பொ.த சாதாரண தர பரீட்சை குறித்த திகதியில் நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீர...
புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுப்பது அவசியம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்...
|
|