கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தலே இன்றைய தேங்காய் எண்ணெய் பிசச்சினைக்கு காரணம் – அமைச்சர் பந்துல குணவர்த்தன!

Friday, April 2nd, 2021

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயுடன் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்படுவதை தடை செய்யும் புதிய வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிமாக மேற்கொள்ளுமாறும் அமைச்சர் பந்துல குணவர்த்தன நுகர்வோர் அதிகார சபைக்கு வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

இறக்குதி செய்யப்படும் எண்ணெய் வகைகளுடன் ஏனைய எண்ணெய் வகைகளை கலப்பதற்கு அனுமதி அளித்து 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் பிரச்சினைக்கு கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தலே காரணம் எனறும் அவர்’ இதன்போது மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: