ஓய்வூதிய பணம் பெறச்சென்ற முதியவர் வங்கியில் மரணம் – சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் சம்பவம்!

Monday, November 15th, 2021

தனது ஓய்வூதிய பணத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ளச் சென்ற முதியவர் ஒருவர் வங்கியில் வாடிக்கையாளர் பகுதி ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இறந்த சம்பவமொன்று சுன்னாகம் நகர்ப்புற வங்கி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை சுன்னாகம் நகரப்பகுதியில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

இன்று காலை தெல்லிப்பளை கொல்லன்கலட்டி பகுதியைச் சேர்ந்து சுப்பிரமணியம் காசிநாதர் என்ற 81 வயதுடைய குறித்த முதியவர் தனது ஓய்வூதிய பணத்தை பெற்றுக்கொள்வதற்காக சுன்னாகம் நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தேசிய சேமிப்பு வங்கிக்கு சென்றுள்ளார்.

அத்துடன்  தனது பணத்தை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச் சிட்டை நிரப்பி வங்கி அதிகாரியிடம் கொடுத்து பணத்தை பெற்றுதற்காக வபடிக்கையாளர் காத்திருக்கும் பகுதியில் ஆசனம் ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முதியவருக்கான ஓய்வூதிய பணத்தை வழங்குவதற்காக அவரது பெயரை வங்கி அதிகாரி பலதடவைகள் கூறி அழைத்தபோதும் அவ் முதியவர் தனது பணத்தை பெறச் செல்லாததால் சந்தேகம் கொண்ட வங்கி ஊழியர்கள் குறித்த முதியவரை நெருங்கி வருமாறு அழைத்துள்ளனர்.

ஆனால் குறித்த முதியவர் எதுவித அசைவுகளும் இன்றி கதிரையில் இருந்து சரிந்து வீழ்ந்துள்ளார்.

இதையடுத்து குறித்த முதியவர் இறந்துள்ளார் என்பதை ஊகித்த வங்கி அதிகாரிகள் பொலிசாருக்கு தகவலை தெரியப்படுத்தியிருந்ததுடன் வங்கியின் செயற்பாடுகளையும் தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: