ஓய்வூதியம் பெறுவோருக்கான அறிவித்தல்!

Tuesday, August 10th, 2021

நாட்டினுள் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நிலைமை காரணமாக பல்வேறு ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றுமுதல் மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என ஓய்வூதியத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வூதியத் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகளுக்காக 1970 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: