ஒரு மாதத்திற்கு நீடிக்கவுள்ள மின்சார விநியோகத் தடை !
Tuesday, March 26th, 2019தற்போது நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள அட்டவணைக்கு அமைவாக நான்கு மணித்தியால மின்சார விநியோகம் தடைபடுவதாக அறிவிக்கப்பட்டது.
காலை 8.30 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை அல்லது 2.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதுடன், மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை அல்லது 7.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை அல்லது 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரையான ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக சஜுத் பிரேமதாச !
முகக்கவச ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - சுங்கத் திணைக்கள ஊடக பேச்சாளர்!
யாழ்ப்பாணத்தில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது சுகாதார நடைமுறைகள் - வடக்கு மாகாண சுகாதார சேவை...
|
|