ஒரு இலட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு 2 ஆவது தொகுதி கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது!
Sunday, May 9th, 2021‘அஷ்ரா செனேக்கா’ தடுப்பு மருந்தின் இரண்டாவது தடுப்பூசி 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் தொகுதி 9 இலட்சத்து 29 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.
இதேவேளை, சீனாவின் ‘சைனோபாம்’ தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை நேற்றைதினம் பாணந்துறையில் ஆரம்பமானது.
அவசர பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்தின் இரண்டு தொகுதிகளும் இலங்கையிலுள்ள சுமார் 3 ஆயிரம் சீன நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
ஆசிரியர்களின் பணித்தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும்!
தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு புள்ளடியை மாத்திரம் இடுதல் வேண்டும்!
ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
|
|