ஒரு இலட்சத்து ஆறு ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பு!

Thursday, May 26th, 2022

ஒரு இலட்சத்து ஆறு ஆயிரத்து 420 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், வருமானம் குறைந்த மக்களுக்கு தற்பொழுது வழங்கப்படுகின்ற தொகையை விட மேலதிகமான தொகையைச் சேர்த்து தலா 5,000 ரூபாய் வழங்குவதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 78,442 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும் 27,978 வறிய குடும்பங்களுமென மொத்தமாக 106420 குடும்பங்கள் அந்த நன்மையைப் பெறும்.

இதற்கான ஏற்பாடுகளை சமுர்த்தி திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில் அந்த நிதி கிடைத்தவுடன் மே மற்றும் யூன் மாதங்களில் அந்த கொடுப்பனவு கிடைக்கும் என்றார்

இதேவேளை எரிவாயு விநியோகம் பங்கீட்டு அட்டைக்கு பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளரின் கண்காணிப்பின் அந்த அந்த பகுதி முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக எரிவாயு விநியோகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு இருந்தன. இந்நிலையில் விநியோக நடவடிக்கைகளை குழப்பம் இன்றி மேற்கொள்வதற்காக நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இவ்வாறு சிலிண்டர் விநியோக நடவடிக்கையில் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு. அவை தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.கலந்துரையாடல்களின் முடிவில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை குழப்பம் இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனை குழப்பம் இன்றி முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிலர் கறுப்பு சந்தைகளில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

கிடைக்கத்தக்க அளவிலான எரிவாயு சிலின்டர்களின் அடிப்டையிலே பிரதேசங்களுக்கு பங்கிட்டு வழங்க வேண்டிய சூழநிலை காணப்படகின்றது.

எரிபொருளினை பொறுத்த வரையில் நேற்றைய தினத்தில் 6600 லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் 24 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதே அளவிலான எரிபொருள் இன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற நிலைமை தொடர்ந்தும் இடம்பெறாது. மேலும் பொதுமக்கள் எரிபொருளினை வாங்கி சேமித்து வைக்காமல் தேவையான அளவு மாத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும். முறையான பாவனையின் மூலம் அனைவருக்கும் எரிபொருள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

அதே போன்று கடந்த சில நாட்களாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மண்ணெண்னை தட்டுப்பாட நிலவியது. இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது இது தொடர்பாக பேசப்பட்டு அமைச்சுக்கு தெரிவித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: