நாட்டின் கடற்பரப்பு கொந்தளிப்பாக மாறும் சாத்தியம்!

Friday, November 18th, 2016

நாட்டை சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பாக மாறும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்துவரும் மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பானதாக மாறக்கூடும் என்பதால், கடற்றொழில் மற்றும் கடற் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவதானம் தேவை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

கடற்பரப்பில் காற்றின் வேகம் சடுதியாக அதிகரிக்கலாம். வளிமண்டலத்தில் தென்கிழக்கு பகுதியில் திரண்டுள்ள முகில் கூட்டங்கள் காரணமாக மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக மாத்தறை வரை நீடிக்கும் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடலில் மழை பெய்யும் இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை அதிக மழைபெய்யக்கூடும் என்றும் சப்ரகமுவ கிழக்குமாகாணம் மத்திய மற்றும் தென்மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் திம்புலாகல – கந்தேகம பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை இந்தியாவின் , தழிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 68 சதவீதத்திற்கு குறைவாக பெய்துள்ளதாகவும் பருவமழை தொடங்கி நீண்ட நாட்களாகியும் கனமழை இல்லை என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய உதவிப்பணிப்பாளர் ஜெனரல் எஸ்பிதம்பி தெரிவித்துள்ளார்.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாகவும் மழைக்கு பதிலாக பல்வேறு பகுதிகளில் பனிக்குளிர் காணப்படுவதாகவும் அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

05f125c0e625b23a85c2751d57a7f37f_XL

Related posts: