‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் உள்ளது – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!
Sunday, November 28th, 2021
இலங்கையில் இதுவரையில் டெல்டா வைரஸ் திரிபு மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மரபணுப் பரிசோதனைகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊரடங்குச் சட்டம்: மீறிய 22000 பேர் இதுவரையில் கைது - பொலிஸார் !
தொடர் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் –அமைச்சர் வெளியிட்ட தகவல்!
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றம் விழிப்புணர்வுகள் குறித்து வெளிவிவகார அமைச்சருக்கு ஐ.நா. பி...
|
|
|


