இங்கிலாந்து பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் – பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, April 7th, 2020

கொரோனா தொற்றுறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்;ட நிலையில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் அந்த நாட்டு மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சர்வதேச தலைவர்கள் பலர் தொடர்ந்தும் சமூகவலைத்தளங்களின் ஊடாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெஹ்ரன் (Emmanuel Macron உள்ளிட்ட பலரும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: