ஐ.நா. செல்கின்றார் அமைச்சர் ராஜித!

Friday, July 15th, 2016

உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில்  அடுத்தவாரம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையிலான சுகாதார மற்றும் வைத்திய குழுவினர் ஐக்கிய நாடுகள் சுகாதார அமைப்பிற்கு  செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது. அத்துடன் அடுத்த வாரம் இறுதில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இலங்கை வருகின்றார்.

வருடாந்தம் நடைபெற்றும் உலக சுகாதார மாநாட்டை முன்னிட்டு இம்முறை இலங்கையும் சர்வதேச சுகாதாரான மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளது.  உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் இலங்கையும் கலந்துகொள்கின்றது. இம்மாதம் 18 ஆம், 19ஆம் திகதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. ஆகவே இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் விசேட வைத்தியர் மற்றும் சுகாதார குழுவினர் ஐக்கிய நாடுகள் சபைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.

அதேபோல் அடுத்தவாரம் இறுதியில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இலங்கையின் சுகாதார சேவைகள், இன்று சுகாதார துறையில் சர்வதேச ரீதியில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு இவர்கள் இலங்கைக்கு வருகை தருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: