ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கு 69 பொலிஸ் உத்தியோகத்தர்கள்!
Thursday, April 11th, 2019இலங்கையின் 69 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இணைவதற்கு தகுதி பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
கடந்த 02ம் திகதி இடம்பெற்ற தெரிவுப் பரீட்சையில் இந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், மகளிர் பிரதம பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் சார்ஜென்ட்கள் உள்ளிட்டவர்கள் இதில் தகுதி பெற்றுள்ளனர்.
இது சம்பந்தமான பரீட்சைக்கு 250 பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முச்சக்கர வண்டி தொடர்பில் முக்கிய அறிவித்தல்!
ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை - மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் சு...
|
|