பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்க நடவடிக்கை!
Tuesday, September 10th, 2024
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்கப்படவுள்ளன.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் மற்றும் முகமாலை பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகளே அகற்றப்பட்டுள்ளன.
இதன்படி, 11 இலட்சத்து 42 ஆயிரத்து 563 சதுரமீற்றர் பகுதியிலுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள பகுதிகளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்றுமுதல் முழுமையாக நீக்கப்படுகின்றது ஊரடங்கச் சட்டம் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இந்திய தூதுவருடன் பிரதமர் மஹ...
வேட்பாளர் வைப்புத்தொகை 43 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை - ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் சாத்தியமில்ல...
|
|
|


