ஐ.தே.கட்சியின் உறுப்பினரானார் சரத் பொன்சேகா!
Thursday, June 30th, 2016அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா இன்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து குறித்த நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் களனி தொகுதியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறிகோத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சி களைக்கப்பட போவதில்லை எனவும், அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற யாப்பில் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|