ஐந்து மாதங்களில் அறுபது மில்லியன் இலாபம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Monday, June 26th, 2023

கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக

கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் கழகம் செயற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேநேரம் எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த இலாபத்தை பெறுவதற்கு முக்கிய காரணம்  முறைகேடுகளை தவிர்க்கும் திறனே  எனவும் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: