ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க தீர்மானம் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
Saturday, March 6th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இவ்வாறு தெரிவிததிருந்த வெளிவிவகார அமைச்சர், படையினருக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக அவர்களை அழைக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
அந்தவகையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யும்படி அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறித்த செவ்வியின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மக்களின் தேவைகளை இனங்கண்டு தீர்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கடமை : ஐங்கரன்
பசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் போராட்டம்: தீர்வு காணுமா நகராட்சி மன்றம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பு - பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வையும், நிதி பற்றிய அறிவையும...
|
|
|
அடிப்படை வசதிகள் இன்றி வெளிமாவட்ட அரச பணியாளர்கள் - அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டு!
மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் - விவசா...
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பேருக்கு கொரோனா தெர்றுறுதி – மரணங்களின் எண்ணிக்கையு...


