ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறுப்புக்களிலிருந்து விலகிச் செல்லவில்லை என ஜெனீவாவுக்கான வதிவிடப்பிரதிநிதி தெரிவிப்பு!

Thursday, February 15th, 2018

ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்களிலிருந்து விலகிச்செல்லவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் ஆயுத களைவு, குடிப்பெயர்வு, மனித உரிமைகள், சுகாதாரம், புலமைச் சொத்து, விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஐக்கிய நாடுகள் முறைமைக்கும் கொள்கைகளுக்கும் உடன்பட்டு அதன் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்க வளங்கிவரும் ஒத்துளைப்பு பற்றி அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Related posts: