ஏ.ஆர்.வி.தடுப்பூசி வசதிகளை நெடுந்தீவுக்கும் ஏற்படுத்துங்கள் !

Tuesday, November 21st, 2017

நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முன் வைக்கப்பட்ட நெடுந்தீவு வைத்தியசாலைக்கு ஏ.ஆர்.வி தடுப்பூசி ஏற்றும் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி பிர’தெச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

வேலணை, ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளில் இருக்கும் ஏ.ஆர்.வி தடுப்பூசியானது நெடுந்தீவு வைத்தியசாலையில் இல்லாதமையால் அதற்காக படகுமூலம் அலைய வேண்டியநிலை காணப்படுகின்றது.

நெடுந்தீவில் வாழும் 5 ஆயிரம் மக்களுக்கான ஒரே ஒரு வைத்தியசாலைக்கும் அதனை வழங்குங்கள் எனக் கோரிக்கை விடப்பட்ட?து.  கோரிக்கை விடுக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்தும் அதே நிலமை தொடர்வது குறித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரியும் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பில் மாவட்ட சுகாதார சேவைப்பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமாருடன் தொடர்பு கொண்டு

Related posts: