ஏவுகணை எதிர்ப்பு அமைப்பினால் தாக்கி அழிக்கப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தாக்கியதில் இஸ்ரேலில் பணியாற்றிவரும் இலங்கையர் ஒருவர் காயம்!

Sunday, July 14th, 2024

இஸ்ரேலில் பணியாற்றிவரும் இலங்கையர் ஒருவர், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பினால் தாக்கி அழிக்கப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தாக்கியதில் காயமடைந்துள்ளார்.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இதனை எமது செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

காயமடைந்தவர் வடக்கு இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இலங்கையர் எனத் தெரியவந்துள்ளது.

ஏவுணையின் இரும்புத் துண்டு ஒன்று தலையில் தாக்கியதில் குறித்த நபர் காயமடைந்ததாகவும் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

சமையல் எரிவாயு சிலின்டர் தட்டுப்பாட்டிற்கு இன்னும் 6 நாட்களுக்குள் தீர்வு - லிட்ரோ காஸ் நிறுவனத்தின்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பு விடயங்களை தாமதப்படுத்த இலஞ்சம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமை...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு - பலன்களை நுகர்வோருக்கு வழங்குவதற்கான ப...