யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை!

Wednesday, July 20th, 2016

யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.திசிதரன் இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களிற்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரை யாழ்.மேல் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிஸார் இன்றையதினம் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இன்று காலை யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில் இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு குறித்த வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts: