ஏற்றுமதிகளை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகை – பிரதமர்!
Monday, November 6th, 2017
வரும் ஏப்ரல் மாதம் முதல் ஏற்றுமதி அபிவிருத்திகளை முன்னெடுக்கும் கம்பனிகளுக்கு வரி சலுகைகளை வழங்குவதற்கும் ஊகுகுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்pகரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெனியாய மத்திய கல்லூரி மைதாளத்தில் 4 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன. காணி உரிமையற்ற மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்த வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார்.அதன் போது விகாரைக்கான காணி உறுதிகளையும் பிரதமர் வழங்கினார்.
ஏற்றுமதி அபிவிருத்தி ஊடாக நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த பிரதமர் நாட்டின் கடன் சுமையை அடுத்த சந்ததியினரும் சுமப்பதற்கு இடமளிக்க போவதில்லையென்றும் கூறினார்.
Related posts:
மாற்றுவழி இருந்தால் அவதானம் செலுத்த வேண்டும்
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க கொள்கை மாறாது போராடி வரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா - வவுனி...
வெளித்தலையீடுகள் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்தளித்தலே அரசின் நிலைப்பாடு - ஜப்பான் அமைச்சருக்கு அமைச...
|
|
|


