உள்ளூராட்சி சபை தேர்தல்கள் 2017 வரை பிற்போடப்படலாம்?

Tuesday, October 11th, 2016

 

உள்ளூராட்சி சபைத்தேர்தல்கள் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரையில் பிற்போடப்படலாம் என்று நிதி ராஜாங்க அமைச்சர் லச்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்தார். எல்லை நிர்ணயப்பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே அதற்காக சில காலங்கள் பிடிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

ஏற்கனவே, உள்ளூராட்சி சபைத்தேர்தல்கள், 2017 முற்பகுதியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

lakshman-yapa-abeywardena-380-seithy

Related posts: