ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் ஆரம்பம்!

Thursday, March 25th, 2021

தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மீளத்திறக்கப்பட உள்ளதாக கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் பொது முகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி, குறித்த பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், 5 ஆம், 11 ஆம் மற்றும் 13 ஆம் தரங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து தரங்களுக்கும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஆட்பதிவு நடவடிக்கை தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை - ஜனாதிபதி!
செத்தல் தேங்காய் என்று கூறுவது தென்னையில் உள்ள ஒரு நோயே - தென்னைப் பயிர் செய்கை சபையின் யாழ்ப்பாணப் ...
தோழர் வசந்தன் (மாமா) அவர்களின் தாயாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சி மலர்வளையம் சாத்தி இறுத...