ஏனைய நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதை முடிவுகட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் !

Tuesday, September 3rd, 2024

இலங்கை ஏனைய நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய சகாப்தத்தை உருவாக்க, அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டிய நேரம் இது. ஏனைய நாடுகளில், இலங்கை தங்கியிருப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இதுவாகும்.

இலங்கையர்கள் தாமாகவே தேசத்தைக் கொண்டு நடத்தும் வகையிலான நிதியை உழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

000

Related posts: