எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் கைது!

Thursday, March 25th, 2021

இலங்கையின் கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைதான இந்திய மீனவர்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

Related posts: