எரிபொருள் விலை தொடர்பிலான தீர்மானம் தொடர்பில் அமைச்சர் ரணதுங்க கருத்து!

Friday, April 20th, 2018

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் சேர்ந்தே தீர்மானிக்க போவதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும், இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய கம்பனியையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதா அல்லது மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களாக முன்னெடுப்பதா என்பதை பற்றி இதுவரை எந்தவொரு அரசும் முடிவு செய்யவில்லை என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Related posts: