எரிபொருள் விலைச் சூத்திரம் அமுலாக்கம்!
Saturday, June 30th, 2018நாட்டில் புதிதாக அமுலாக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரம் உரியவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறந்த பலனைப் பெற முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெப்ஃரி ரைஸ், நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட முக்கிய விடயமாக புதிய விலைச்சூத்திர அமுலாக்கம் அமைந்திருக்கிறது. இதன் ஊடாக நிதி அபாயத்தை தவிர்த்துக் கொள்ள முடியும்.
அத்துடன் இந்த மறுசீரமைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை நிதி அமைச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
கொழும்பில் அமைந்துள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் தீ!
ஒரு மாதத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களே பெருமளவிற்கு உயிரிழக்கின்றனர் - இலங்கை மருத்துவர் சங்கம்...
மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு கிடையாது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு!
|
|