எரிபொருள் விலைச் சூத்திரம் அமுலாக்கம்!
Saturday, June 30th, 2018நாட்டில் புதிதாக அமுலாக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரம் உரியவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறந்த பலனைப் பெற முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெப்ஃரி ரைஸ், நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட முக்கிய விடயமாக புதிய விலைச்சூத்திர அமுலாக்கம் அமைந்திருக்கிறது. இதன் ஊடாக நிதி அபாயத்தை தவிர்த்துக் கொள்ள முடியும்.
அத்துடன் இந்த மறுசீரமைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை நிதி அமைச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
யாழ் மாநகர பகுதிக் கடலோரங்களை சுற்றுலா தளமாக உருவாக்கும்போது சுற்றுச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செல...
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 ஆக உயர்வு!
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
|
|