எரிபொருளை விநியோகிப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை – அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா அறிவிப்பு!

Sunday, September 12th, 2021

எரிபொருளை விநியோகப்பதில் பிரச்சினை இல்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் களஞ்சியசாலை சேவையாளர்களில் ஒரு பகுதியினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்ற போதும் நாட்டில் எரிபொருளை பகிர்ந்தளிப்பதற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்றும் அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சனிக்கிழமைகளில் எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இளம் கர்ப்பிணிப்பெண் படுகொலையை கண்டித்து ஊர்காவற்றுறையில் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து அமைதி ஊர்வலம்!
யாழ் மாநகர முதல்வரின் பிரத்தியேக ஆளணிக்கு ஆப்பு வைத்த சபை உறுப்பினர்கள் – குழப்பத்தில் ஆர்னோல்ட்!
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதனூடாக அரசின் பலம் மேலும் வலுவடையும் – பிரதமர் மகிந்த நம்பிக...