எரிபொருட்களிற்காக வரிசையில் நிற்கவேண்டியதில்லை – அடுத்த சில வாரங்களில் மூன்று கப்பல்கள் வரவுள்ளன – அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவிப்பு!
Monday, May 16th, 2022எரிபொருட்களுடன் மூன்று கப்பல்கள் அடுத்த இரண்டுவாரத்திற்குள்ள வரவுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சனவிஜயசேகர மக்களை வரிசையில் நிற்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த இரண்டுவாரத்திற்குள் மூன்று கப்பல்கள் எரிபொருட்களுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் வரவுள்ளன என தெரிவித்துள்ள அமைச்சர் இந்திய கடனுதவி மூலமே இந்த எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த கப்பல்கள் வந்ததும் போதியளவு எரிபொருட்கள் மக்களிற்கு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று டீசல்கப்பல் வந்துள்ளது இந்திய கடனுதவியுடன் பெறப்படும் கப்பல்கள் அடுத்த இரண்டுவாரமளவில் வரவுள்ளன அதன் பின்னர் போதுமான எரிபொருள் கிடைக்கும் இதன்காரணமாக மக்கள் அடுத்த மூன்று நாட்களிற்கு வரிசையில் நிற்கவேண்டியதில்லை பதற்றமடைந்து எரிபொருளை கொள்வனவு செய்யவேண்டியதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|