எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை, இந்தியா திட்டம் !
Tuesday, March 28th, 2023
இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதன்படி, எரிசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றவுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தப்படும் சூரிய சக்தி, காற்றாலை திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலில் மாணவனின் கால் முறிவு – வடமராட்சியில் சம்பவம்!
இலங்கையில் பரவிவரும் கொரோனா தொடர்பான ஆராய்ச்சி ஜூன் மாதம் முதல் வாரத்தில் - கலாநிதி சந்திம ஜீவந்தர வ...
தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும்போது ஏற்கனவே உள்ள விதிமுறைகளை கடைபிடிப்பத...
|
|
|


