எமது ஆட்சியில் அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம் – அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு!

Friday, May 7th, 2021

எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் கலந்துரையாடியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் என்று பல சவால்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ளன.

எனவே, அனைத்துச் சவால்களையும் முறியடித்து நாட்டு மக்களுடன் இணைந்து பயணிப்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா – இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடடி;பட்டமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: