எந்தவொரு தொலைபேசி உரையாடல்களும் பதிவுசெய்யப்படவில்லை – வதந்திகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பதில்!
Thursday, April 6th, 2023நாட்டில் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்யப்படுவதாகவும், வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. எனினும் இந்த செய்திகள் வெறும் வதந்திகள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு, இதுபோன்ற தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதோ, தொலைபேசி அழைப்புகளை சேமித்து வைப்பதோ அல்லது வட்ஸ்எப் மற்றும் பேஸ்புக் அழைப்புகளை கண்காணிப்பதோ இல்லை என பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
எனவே சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
லலித் ஜெயசிங்கவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படாது - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டு - வேலணை பிரதேச சபையின் உறுப்பின...
|
|