20 ஆம் திகதியின் பின்னர் காலநிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, January 17th, 2017

இலங்கையை ஊடறுத்தி வீசும் காற்றின் மாற்றம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களில் மழை ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

20ம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சியான காலநிலை நிலவும். எனினும் இரவு வேளைகளில் சில பிரதேசங்களில் குளிரான காலநிலை காணப்படும்.

எனினும் அண்மைய நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில் உறைபனியுடனான காலநிலை நிலவுகிறது. இதன்காரணமாக அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சி காரணமாக அனைத்து நீர் நிலைகளும் வரண்டு காணப்படுவதால் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

V.E.N.Media

Related posts: