எந்தவொரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு!
Tuesday, July 12th, 2022எந்த ஒரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியத் தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் காணொளிகளில் உண்மையில்லை என அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் உயர்பீட தலைவர்கள் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டிலேயே தங்கியிருப்பார்கள் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!
பயிர் செய்ய முடியாத அனைத்து வயல் நிலங்களிலும் தென்னைச் செய்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
வவுனியா தெற்கு பிரதேச சபை சிற்றூழியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!
|
|