சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றி – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவிப்பு!

Saturday, December 10th, 2022

சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் –

இலங்கை மற்றும் சாம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கான விரைவான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தம்மால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு சீனா சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவருக்கும் சீனப் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் இந்த நம்பிக்கையான பதில் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: