எந்தவொரு அரச நிறுவனமும் மூடப்படாது – பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, January 31st, 2023

எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் தொடர்பில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலையில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எந்த அரச நிறுவனங்களையும் மூடுவதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


யாழ் . மாநகரில் அதிகரிக்கும் டெங்குத் தொற்று – 6 மாதங்களில் 224 பேர் பாதிப்பு என மாநகர சுகாதாரப் பிர...
எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைப்பதற்க இலங்கை மத்திய வங்கி ...
வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் அவ்வப்போது மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...