எதிர்வரும் 10ஆம் திகதி முதல் கடுமையாக அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

Wednesday, May 29th, 2019

நாட்டில் புதிய வீதி ஒழுங்கை சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதும் கடந்த 27ஆம் திகதி முதல் இரண்டு வார கால அவகாசம் சாரதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்வரும் பத்தாம் திகதி முதல் வீதி ஒழுங்கை சட்டமானது கடுமையாக நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வாகன நெரிசல் மற்றும் வீதி விபத்துக்கள் என்பவற்றை தடுக்கும் நோக்கில் பிரதான நகரங்களில் இந்த வீதி ஒழுங்கை சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

எனினும் இந்த சட்டத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக சாரதிகளுக்கு கடந்த 27ஆம் திகதி முதல் இருவார காலங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசம் முடிவடைந்ததுடன் எதிர்வரும் பத்தாம் திகதி முதல் இது தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

குறிப்பாக பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் வீதியின் வலது பக்கத்தில் செல்ல வேண்டும் என்பதுடன், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பேருந்துகளுக்கான பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கல்கிசை, வெலிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த முக்கிய வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வலது புறத்தில் பொது போக்குவரத்து பேருந்துகள் செல்லும் நடைமுறை நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்படும்.

இதனால் இந்த வீதி நிரல் முறையை பேருந்து சாரதிகளும் பின்பற்ற வேண்டும் என்பதுடன், எதிர்வரும் பத்தாம் திகதி முதல் இந்த புதிய சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

Related posts: