எதிர்வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு முறைமையை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் – ஐ. நா. உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் தெரிவிப்பு!

Thursday, June 9th, 2022

எதிர்வரும் சில மாதங்களில் நாட்டின் வழமையான உணவு வழக்கம் குறைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு முறைமையை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என  ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவு பாதுகாப்பு தினத்திற்கு இணையாக அந்த வேலைத்திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரசாயன மற்றும் சேதன பசளை உள்ளிட்ட விவசாய இராயனங்களை இறக்குமதி செய்வதற்காக சர்வதேசத்திடம் உடனடியாக நிதியுதவியை பெற்றுக் கொள்ள இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


முறைகேடுகள் அதிகரிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு!
கௌதம் அதானியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - காற்றலை மின்உற்பத்தி திட்டம் மற்றும் பசுமை ஐத...
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அதிகூடிய வெப்பநிலை - எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென ...