எதிர்வரும் திங்கள்முதல் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இன்றையதினம் பேருந்துகள் வழமை போன்று சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் வார இறுதி நாட்களில் குறைந்த அளவிலான பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எந்த அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்க தயார் - இராணுவத் தளபதி!
இணைவழி கற்றலில் ஈடுபட வசதிகளற்ற மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் புதிய திட்டம் - கல்வி அமைச்சர் பேர...
நாட்டில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெ...
|
|