எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்?
Sunday, February 28th, 2021
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை தனது பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை எதிர்வரும் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அனைத்து மாகாணங்களும் அந்தந்த ஆளுநர்களில் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் வகையில் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் திட்டமிட்டிடிருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடைமுறைக்கான சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!
சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!
உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|
|


