உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Friday, October 21st, 2022நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பீங்கான், கண்ணாடி மற்றும் சுகாதாரப் பொருட்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் வருடாந்த ஏற்றுமதி வருமானம் 10 முதல் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் இறக்குமதியை குறைத்து உள்ளூர் இறக்குமதி மாற்று உற்பத்திகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாளை நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தம்!
வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு - தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சிற்கான துறைசார் பொறுப்புகள் மறுசீரமைப்பு – வெளிய...
|
|