எதிர்வரும் சில வாரங்களில் அரிசி விலையில் விரைவில் மாற்றம்!

எதிர்வரும் சில வாரங்களில் அரிசியின் விலை குறைவடையும் என்று நெல் கொள்வனவு சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
சிறுபோக நெற்செய்கையில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் அரிசியின் விலை விரைவில் குறைவடையும் என்று அவர் கூறினார்.
இதேவேளை அரிசி விலையை முறையாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஏமாறத் தயாரில்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர்!
கல்வித்துறையில் மாஃபியாக்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை - அமைச்சர் அகில விராஜ்!
சாரதிகளுக்கான எச்சரிக்கை!
|
|