எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – பலருக்கு வறுமையும் ஏற்படக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Thursday, May 26th, 2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பலருக்கு வறுமை ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வழமையான முறையில் தொடர முடியாமைக் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர முடியாது.
அரசாங்கம் சலுகை வழங்காத விடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு முடியாது போகும்.
இதனால் பலர் தமது தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டியேற்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
டெங்கு நோய்த்தொற்றை தடுக்க துரித நடவடிக்கை - யாழ். பொலிஸார்!
கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தின் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
உண்மைகளை தெரியப்படுத்துங்கள் - கடன் நீடிப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிறப்புப் பணி வர்த்தக, தொ...
|
|
|


