எச்சந்தர்ப்பத்திலும் இணைய தாக்குதல் – கணனி அவசர பதிலளிப்பு மன்றம்!

Monday, May 15th, 2017

இணைய தாக்குதல்களில் இருந்து தமது கணனிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கணனி அவசர பதிலளிப்பு மன்றம் கணனிப் பாவனையாளர்களை கேட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இணைய ஊடுருவல் தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இணைய ஊடுருவல் தாக்கத்தினால் சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சம் கணனி மென்பொருள் கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்கலாக இந்த வைரஸ் தாக்குதல் ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளையும் பாதித்துள்ளது. இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக ஐரோப்பிய பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ரொப் வெயின் ரைட் தெரிவித்தார்.

Related posts:

கொரோனா வைரஸின் கொப்புகள் அனைத்தும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - இராணுவ தளபதி தெரிவிப்பு!
மின்னுற்பத்திக்கான எரிபொருள் இன்மையால் வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...
முறைகேடுகள் அதிகரிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு!