எச்சந்தர்ப்பத்திலும் இணைய தாக்குதல் – கணனி அவசர பதிலளிப்பு மன்றம்!
Monday, May 15th, 2017
இணைய தாக்குதல்களில் இருந்து தமது கணனிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கணனி அவசர பதிலளிப்பு மன்றம் கணனிப் பாவனையாளர்களை கேட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இணைய ஊடுருவல் தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இணைய ஊடுருவல் தாக்கத்தினால் சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சம் கணனி மென்பொருள் கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்கலாக இந்த வைரஸ் தாக்குதல் ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளையும் பாதித்துள்ளது. இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக ஐரோப்பிய பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ரொப் வெயின் ரைட் தெரிவித்தார்.
Related posts:
நாட்டின் பொருளாதாரத்தை கவிழ்க்கும் விடுமுறைகள்!
உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டமூலம் குறித்த யோசனைக்கு அனுமதி
திங்கள் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!
|
|
|


