எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வழங்குமாறு நீதி அமைச்சு கோரிக்கை!

தீக்கிரையான எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட நட்டத்தை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட 5 உபகுழுக்களுக்கு கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வழங்க முடியும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
காப்புறுதி, நீதித்துறை, மீனவ, சுற்றாடல் மற்றும் பொருளாதாரம் ஆகிய ஐந்து பிரிவுகளில் இதற்காக உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதன்படி உபகுழுக்களுக்கு உட்பட்ட துறைசார் வல்லுநர்களுக்கு கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல் வழங்க முடியும்.
அதற்கிணங்க 0112 44 54 47 என்ற தொலைநகல் இலக்கத்துக்கு அல்லது reforms@mog.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதிக்கு முன்னர், கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல்களை வழங்கமாறு நீதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பண மோசடி தொடர்பில் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!
குறுகிய காலத்தில் கடலோர பாதுகாப்புப் படையினர சாதனை!
சகல பாடசாலைகளும் புதிய ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீள திறக்கப்பட்டன!
|
|
பயிரிடப்படாத பெருந்தோட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசனை - தொழில் அமைச்சர் நிமல்...
அரசாங்க அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது பொது நிர்வாகம் மற்...
நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த...