எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவை பெற்றது இலங்கை!

Sunday, September 24th, 2023

இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் தீப்பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் ஏற்பட்ட செலவினங்களுக்காக குறித்த இழப்பீட்டு தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதன்படி, 890,000  மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீட்டு தொகையாக திறைசேரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: