ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று: கொழும்பு மத்திய தபால் பரிமாறல் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Thursday, November 5th, 2020

கொரோனா தொற்றின் காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – 10  டி.ஆர் விஜயரத்ன மாவத்தையில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாறல் சேவையில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர்  கொரோனா தொற்றுக்குள்ளானவராக உறுதி செய்யப்பட்டதினால் அதன் அனைத்து நடவடிக்கைகளும், பொது மக்கள் அலுவல்களும் மீண்டும் அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றாடல் பகுதியில் கிருமி தொற்று நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் கடமைகள் ஆரம்பிக்கப்படும் தினம் தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தபால் மா அதிபர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிவிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடும் வறட்சியினால் வட,க்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 583 பேர் பாதிப்பு - அனர்த்த மு...
சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது – பிரதமர் மஹ...
சீரற்ற காலநிலை - யாழ் மாவட்டத்தில் ஆயிர்ததிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து...

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய 11,552 பி.சி.ஆர் பரிசோதனைகள் - யாழ்ப்பாணத்திலும் சில பகுதிகள் முடக்கம...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும் - மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமை...
கூட்டமைப்பின் எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமிப்பர் - சஜித் அணியும் வருவது உறுதி அமைச்சர் பிரன்ன ரணதுங்க...