ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொல்ஸ் ஊடகப் பிரிவு!
Monday, May 25th, 2020கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1710 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல் ஊரடங்கு உத்தவை மீறி பயணித்த 18 ஆயிரத்து 169 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது - ரிஷாத்
சாதாரணப் பரீட்சை நாளை ஆரம்பம்!
ஜனாதிபதி- பிரதமரின் தலைமையில் தங்காலையில் இடம்பெற்ற டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 54ஆவது நினைவு தினம்!
|
|