உள்ளூர் உற்பத்திகளின் நலன்கருதி உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு – இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவிப்பு!

Friday, May 1st, 2020

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக  இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது..

இதனடிப்படையில் ஹைலண்ட், நெஸ்ட்லே மற்றும் பெலவத்த போன்ற பால் மா வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 945 ரூபாவாகவும், 400 கிராமின் விலை 380 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பால் மா உற்பத்தி நிறுவனங்கள் நட்டத்தில் பால் மா உற்பத்தியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த விலை அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அடுத்த வாரம் ரயில் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானியை வெளியிட அமைச்சு திட்டம்!
குற்றவாளியாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் உள்நாட்டு விளையாட்டுத்துறை அமைப்புகளில் பதவிகளை வகிக்க தடை...
இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி – முதலமைச்சர் ஸ்ராலினிடம் காசோலையாக வழங்கிவைப்ப...